தஞ்சையில் குளம், குட்டைகளை தூர்வாரக் கோரி, நூதன முறையில் சமூக ஆர்வலர் சிலம்பம் சுற்றி அதிகாரிகளிடம் மனு அளித்தார்.
நாச்சியார் கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளை தூர்வாரக் கோரி, கோவிந்த வல்லபந்த் என்பவர் பல ஆண்டுகளாக கோரிக்கை மனுக்களை அளித்து வந்தார்.
ஆனால் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காததால், கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு வந்த சமூக ஆர்வலர் கோவிந்த வல்லபந்த், பல ஆண்டுகளாக அனுப்பிய கோரிக்கை மனுக்களை மாலையாக அணிந்து சிலம்பம் சுற்றி கவனம் ஈர்த்தார்.
மேலும், குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீண்டும் அவர் மனு அளித்தார்.