தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, தெரு நாயை அடித்து கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கூசாலிபட்டி கிராமத்தில் செல்லத்தாய் என்பவர் வசித்து வருகிறார்.
இவரது வீட்டின் அருகே உள்ள தெரு நாயை, அதே பகுதியை சேர்ந்த மகேஷ் குமார், சோலை ராஜ், ஊரணி தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆகியோர் இணைந்து அடித்துக் கொன்றுள்ளனர்.
இதுகுறித்து செல்லத்தாய் அளித்த புகாரின் அடிப்படையில், கோவில்பட்டி போலீஸார் மூவரையும் கைது செய்தனர். அந்த தெரு நாய் பலரையும் கடித்ததாலேயே அதனை அடித்துக் கொன்றதாக மூவரும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, காவல் நிலையத்தில் புகாரளித்ததற்காக, செல்லத்தாயி வீட்டின் சிசிடிவி கேமராவை உடைத்த நபர்களின் நண்பரான சுந்தர் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.