நீட் தேர்வில் முறைகேடு என போலியான ஆவணங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வின்போது தமக்கு வழங்கப்பட்ட விடைத்தாள் கிழிந்துவிட்டதாக கூறி தேசிய தேர்வு முகமை எதிராக ஆயுஷி பட்டேல் என்ற மாணவிஅலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆயுஷி பட்டேல் தாக்கல் செய்த விடைத்தாள் போலியானது எனக்கூறி உண்மையான ஆவணங்களை தேசிய தேர்வு முகமை தாக்கல் செய்தது.
715 மதிப்பெண்கள் கிடைத்திருக்கும் என்று மாணவி கூறிய நிலையில் 335 மதிப்பெண்கள் பெற்றதாக தேசிய தேர்வு முகமை ஆவணங்களை சமர்ப்பித்தது மாணவி ஆயுஷி படேலின் மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம், போலி ஆவணங்களை தாக்கல் செய்ததற்காக அவர் மீது வழக்கு தொடரலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கிழிந்த OMR தாள் என போலியான ஆவணங்களுடன் மாணவி ஆயுஷி பட்டேல் பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், மாணவியின் வீடியோவை பகிர்ந்து நீட் தேர்வில் முறைகேடு என கூறிய பிரியங்கா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.