திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை கள்ளச்சாராயம் அருந்தி 70 பேர் உயிரிழந்துள்ளதாக பாஜக சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன்,
ஆட்சி பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளில் கள்ளச்சாராயணத்தில் பல பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
115 பேர் மருத்துவமனையில் இருக்கிறார்கள் 50-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்திருக்கிறார்கள். 2500 கோடி ரூபாய் கஞ்சா போதை வழக்கில் சாதிக் பிடிபட்டார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு ஆட்சி பொறுப்பு ஏற்று 3 ஆண்டுகள் ஆகியுள்ளது. இது வரை விஷ சாரயத்தால் இரண்டு ஆண்டுகளில் 70 பேர் இறந்துள்ளனர்.
ஜாபர் சாதிக் விவகாரத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இவற்றை எல்லாம் கட்டுபடுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஏற்கனவே இந்த சம்பவங்கள் நடந்துள்ளது, அதற்காக இப்போதும் நடக்கிறது என்று திமுக அதனை நியாயப்படுத்துகிறது எனத் தெரிவித்தார்.
விஷச் சாராயத்தால் இனிமேல் உயிர்பலி ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது. உயிர்ப்பலி நிகழக்கூடாது எனக் கூறினார்.