தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கஞ்சா வைத்திருந்த 3 வடமாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பட்டுக்கோட்டை அண்ணா நகர் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் தங்கி உள்ளனர்.
இங்கு போதைப் பொருள் புழக்கம் அதிகமாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், போலீஸார் ஆய்வு நடத்தி, இரண்டு கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் குமார், விஜயகுமார், ரோஷன் குமார் (வயது 22) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.