மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஆசிரியர் வீட்டில் திருடிய 3 பேர் சிக்கினர்.
சீர்காழி விளந்திடசமுத்திரம் வில்வா நகரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் திருமாறன் (58) வீட்டில் தங்க நகைகள், வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து சீர்காழி போலீஸார் விசாரித்தபோது கடலூர் ஓ.டி. காவல் நிலைய சரகத்தில் தடுப்புக் காவலில் இருந்துவரும் ஆனந்தராஜ் (22), கலையரசன் (19), சுரேஷ் (38) ஆகியோர் ஆசிரியர் வீட்டில் திருடியது தெரியவந்தது.
நீதிமன்ற உத்தரவுடன் அவர்களிடம் போலீஸார் விசாரித்து 13பவுன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளிபொருட்களை பறிமுதல் செய்தனர்.