கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி தலைமை அலுவலகத்தில் மனு அளிக்க சென்ற ஒப்பந்த தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி, பெரியார் சதுக்கத்திலிருந்து நெய்வேலி என்எல்சி தலைமை அலுவலகம் நோக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால், தொழிலாளர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஐந்து பேர் மட்டும் என்எல்சி தலைமை அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதை அடுத்து மனுவை என்எல்சி அதிகாரிகளிடம் வழங்கினர்.