அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி, குடியரசு கட்சித் தலைவர் டொனால்ட் டிரம்புக்கு ஒருவர் 50 மில்லியன் டாலர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
அமெரிக்காவில் நிகழாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுவதற்கான வேலையில் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், பீட்டர்ஸ்பர்க்கை சேர்ந்த திமோதி மெலன் என்பவர், தேர்தல் செலவுக்காக 50 மில்லியன் டாலரை டிரம்புக்கு வழங்கியுள்ளார்.
அதுவும் குற்ற வழக்கில் டிரம்ப் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட மறுதினமே இந்த நன்கொடையை அவர் வழங்கியிருப்பதாக அமெரிக்க தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.