டெல்லி வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி வரவேற்பு அளித்தார்.
2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா சந்தித்துப் பேசினார். அப்போது இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக அவர்கள் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர், ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் ஷேக் ஹசினா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.