நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 5 வழக்குகளை பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
நீட் தேர்வு முறைகேடு குறித்த விசாரணையை மத்திய அரசு சிபிஐ வசம் ஒப்படைத்தது. இதனையடுத்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள், மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்து விசாரணையை ஏற்றுக்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் புதிதாக 5 வழக்குகளை பதிவுசெய்த சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.