'மூளையை உண்ணும் அமீபா' பரவும் புதிய தொற்று அதிர்ச்சியில் கேரள மக்கள்!
Aug 20, 2025, 02:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘மூளையை உண்ணும் அமீபா’ பரவும் புதிய தொற்று அதிர்ச்சியில் கேரள மக்கள்!

Web Desk by Web Desk
Jul 1, 2024, 09:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘மூளையை உண்ணும் அமீபா’ எனப்படும் ஒருவகை அமீபிக் தொற்று கேரளாவில் பரவி வருகிறது. அது என்ன மூளையை உண்ணும் அமீபா? விரிவாகப் பார்க்கலாம்.

கடவுளின் தேசமான கேரளாவில் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் அதிகம். அதனால் நீந்துவதிலும் மீன்பிடிப்பதிலும் கேரள மக்களுக்கு அதிக ஆர்வம் உண்டு. எனினும் இன்றைய சூழலில் கேரள நீர்நிலைகளில் நீந்துவது பாதுகாப்பானதா என்ற கேள்வியை அமீபிக் தொற்று குறித்த செய்திகள் எழுப்பியுள்ளன.

அண்மையில் கோழிக்கோட்டைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன் ‘மூளையை உண்ணும் அமீபா’ எனப்படும் ஒருவகை அமீபிக் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே தொற்றால் பாதிக்கப்பட்ட மலப்புரம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் 5 வயது மற்றும் 13 வயது சிறுமிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தப் பிரச்னை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பள்ளிப்படிப்பை முடித்த அனைவருக்கும் அமீபாவைப் பற்றி ஓரளவு தெரிந்திருக்கும். ஆனால் ‘மூளையை உண்ணும் அமீபா’-வைப் பற்றி தெரிந்திருக்காது. Naegleria fowleri எனப்படும் அமீபா ‘மூளையை உண்ணும் அமீபா’ என்றழைக்கப்படுகிறது. அசுத்தமான நீரில் இருக்கும் இவ்வகை அமீபா அதில் நீந்துவோரின் மூக்கு வழியே ஊடுருவி மூளையை தாக்குகிறது. அதன்காரணமாகவே ‘மூளையை உண்ணும் அமீபா’ என்று இதற்கு பெயர்.

இந்த வகை அமீபா ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்தது அல்ல என்கிறார்கள் மருத்துவர்கள். கடுமையான காய்ச்சல், தலை வலி, கழுத்து வலி, வாந்தி, உணர்திறனில் பாதிப்பு போன்றவையே இதன் அறிகுறிகள். இந்த அமீபிக் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 95 முதல் 100 விழுக்காடு. இதற்கென்று தனி சிகிச்சையோ மருந்துகளோ கிடையாது. அசுத்தமான நீரில் நீந்தாமல் இருப்பதும், நீர்நிலைகளை தூய்மையாக வைத்திருப்பதுமே இந்த பிரச்னைக்கான தீர்வு என்கிறார்கள் வல்லுநர்கள். மிக அரிதாக அருவி மற்றும் கடல் நீர் மூலமும் ‘மூளையை உண்ணும் அமீபா’ பரவும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் சுகாதார துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags: The people of Kerala are shocked by the new epidemic of 'brain-eating amoeba'!
ShareTweetSendShare
Previous Post

72 மணி நேரத்தில் 70 அடி பாலத்தை கட்டிய இந்திய ராணுவம்!

Next Post

GOOGLE TRANSLATE-ல் 110 மொழிகள் சேர்ப்பு!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies