'மூளையை உண்ணும் அமீபா' பரவும் புதிய தொற்று அதிர்ச்சியில் கேரள மக்கள்!
Sep 19, 2026, 07:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘மூளையை உண்ணும் அமீபா’ பரவும் புதிய தொற்று அதிர்ச்சியில் கேரள மக்கள்!

Murugesan M by Murugesan M
Jul 1, 2024, 09:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

‘மூளையை உண்ணும் அமீபா’ எனப்படும் ஒருவகை அமீபிக் தொற்று கேரளாவில் பரவி வருகிறது. அது என்ன மூளையை உண்ணும் அமீபா? விரிவாகப் பார்க்கலாம்.

கடவுளின் தேசமான கேரளாவில் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் அதிகம். அதனால் நீந்துவதிலும் மீன்பிடிப்பதிலும் கேரள மக்களுக்கு அதிக ஆர்வம் உண்டு. எனினும் இன்றைய சூழலில் கேரள நீர்நிலைகளில் நீந்துவது பாதுகாப்பானதா என்ற கேள்வியை அமீபிக் தொற்று குறித்த செய்திகள் எழுப்பியுள்ளன.

அண்மையில் கோழிக்கோட்டைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன் ‘மூளையை உண்ணும் அமீபா’ எனப்படும் ஒருவகை அமீபிக் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே தொற்றால் பாதிக்கப்பட்ட மலப்புரம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் 5 வயது மற்றும் 13 வயது சிறுமிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தப் பிரச்னை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பள்ளிப்படிப்பை முடித்த அனைவருக்கும் அமீபாவைப் பற்றி ஓரளவு தெரிந்திருக்கும். ஆனால் ‘மூளையை உண்ணும் அமீபா’-வைப் பற்றி தெரிந்திருக்காது. Naegleria fowleri எனப்படும் அமீபா ‘மூளையை உண்ணும் அமீபா’ என்றழைக்கப்படுகிறது. அசுத்தமான நீரில் இருக்கும் இவ்வகை அமீபா அதில் நீந்துவோரின் மூக்கு வழியே ஊடுருவி மூளையை தாக்குகிறது. அதன்காரணமாகவே ‘மூளையை உண்ணும் அமீபா’ என்று இதற்கு பெயர்.

இந்த வகை அமீபா ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்தது அல்ல என்கிறார்கள் மருத்துவர்கள். கடுமையான காய்ச்சல், தலை வலி, கழுத்து வலி, வாந்தி, உணர்திறனில் பாதிப்பு போன்றவையே இதன் அறிகுறிகள். இந்த அமீபிக் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 95 முதல் 100 விழுக்காடு. இதற்கென்று தனி சிகிச்சையோ மருந்துகளோ கிடையாது. அசுத்தமான நீரில் நீந்தாமல் இருப்பதும், நீர்நிலைகளை தூய்மையாக வைத்திருப்பதுமே இந்த பிரச்னைக்கான தீர்வு என்கிறார்கள் வல்லுநர்கள். மிக அரிதாக அருவி மற்றும் கடல் நீர் மூலமும் ‘மூளையை உண்ணும் அமீபா’ பரவும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் சுகாதார துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags: The people of Kerala are shocked by the new epidemic of 'brain-eating amoeba'!
Share
Tweet
SendShare
Previous Post

72 மணி நேரத்தில் 70 அடி பாலத்தை கட்டிய இந்திய ராணுவம்!

Next Post

GOOGLE TRANSLATE-ல் 110 மொழிகள் சேர்ப்பு!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டம்; செ.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலம் – 1,100 சிலைகள் கரைப்பு!

சென்னை தரமணியில் உலகளாவிய திறன் மையம் – முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் : 2 – ம் கட்டமாக தமிழகத்தில் 25000 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்!

இன்றைய தங்கம் விலை!

12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் – ஒரு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பின்னர் குண்டு வெடிக்கும் – ஸ்ரீவில்லிபுத்தூரில் மிரட்டல் விடுத்த இளைஞர்களிடம் விசாரணை!

ஆட்டம் காட்டும் அமெரிக்கா : 100 % வரி மிரட்டல் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக உருவெடுக்கும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் – திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு அனுப்பி வைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies