மேற்கு வங்கத்தில் தாலிபான் கலாச்சாரம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!
Oct 26, 2025, 05:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்கு வங்கத்தில் தாலிபான் கலாச்சாரம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

Web Desk by Web Desk
Jul 1, 2024, 07:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்கத்தில், பட்டப் பகலில் நடுத் தெருவில், பொது மக்கள் முன்னிலையில், ஒரு ஆணையும் பெண்ணையும் அவர்கள் சுயநினைவு இழக்கும் வரை, ஒருவர் பிரம்பால் சரமாரியாக தாக்கிய சம்பவம் நாட்டையே உலுக்கி இருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது குறித்து ஒரு செய்தி தொகுப்பு .

மேற்கு வங்க மாநிலத்தில் ,உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சோப்ராவில் ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் பட்டப் பகலில் நடுத்தெருவில் பொது மக்கள் முன்னிலையில், ஒருவர் பிரம்பால் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடிவாங்கிய ஆணும், பெண்ணும் முறை தவறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, அக்கிராமத்தில் நடந்த கட்டப் பஞ்சாயத்து கூட்டத்தில் குற்றம் செய்தவர்களுக்குப் பிரம்பு அடி தண்டனை கொடுக்க முடிவு செய்ததாகவும் அதன்படி பொது மக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

தாலீபான் இஸ்லாமிய அடிப்படைவாத பாணியில் , இன்சாப் சபா வழங்கிய உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப் பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த ஜூன் 28 ஆம் தேதி நடந்த இந்த கொடூரத் தாக்குதல் வீடியோவை சிபிஎம் மாநிலச் செயலாளர் முகமது சலீம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இங்கே மேற்கு வங்கத்தில் கங்காரு நீதிமன்றம் போல ஜேசிபி என்ற புனைபெயர் கொண்ட அதிகாரப் பூர்வ குண்டர்கள் தனி நீதிமன்றம் நடத்துகிறார்கள் என்றும், அவர்களே சுருக்கமாக விசாரித்து விட்டு தண்டனை வழங்குகிறார்கள் என்றும் முகமது சலீம் கூறியுள்ளார்.

இந்த வீடியோவை எடுத்தவர் காவல்துறையினரால் அராஜகமான முயைில் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டிருக்கிறார் என்று பதிவிட்டுள்ள முகமது சலீம், இது தான் மம்தாவின் புல்டோசர் நீதி என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், இஸ்லாம்பூர் காவல் துறையினர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, தஜிமுல் என்ற நபரைக் கைது செய்துள்ளனர் .

விசாரணையில், கைதான தஜிமுல் சோப்ரா பகுதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஹமீதுல் ரகுமானுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தெரிய வந்துள்ளது.

மேற்குவங்கத்தில் கடந்த 25 ஆம் தேதி, ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி,தலைமுடியைப் பிடித்து தெருவில் தர தர வென இழுத்துச் சென்ற சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.

இது மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக இல்லை என்பதையே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன என்று பாஜக கடுமையாக குற்றம் சாட்டி இருக்கிறது.

‘ஷரியா சட்டம்’ போன்ற ஒரு கொடூர ஆட்சி மேற்கு வங்கத்தில் கொண்டுவரும் பாதையில் திரிணாமுல் காங்கிரஸ் நடக்கிறது என்பதையே இது காட்டுகிறது என்று தெரிவித்துள்ள பாஜகவின் மேற்கு வங்க மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார், இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை நடைமுறை படுத்தும் மாநிலமாக மேற்கு வங்கம் மாறுகிறதா எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

பாஜகவின் ஊடகப் பிரிவு தலைவர் அமித் மாளவியா,”மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் ஆட்சியின் அசிங்கமான முகம் இது என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும் மேற்கு வங்கத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்றும், ஒவ்வொரு கிராமத்திலும் சந்தேஷ் காலி சம்பவங்கள் நடக்கின்றன என்றும், தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்.

மேலும் பாஜக தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் , தனது எக்ஸ் தளத்தில் ஒரு பெண் ஆளும் மாநிலத்தில் இது தான் பெண்களுக்கு பாதுகாப்புக்கான நிலவரம் என்று தெரிவித்துள்ளார்.

Tags: In West BengalTaliban culture is cruel to women!
ShareTweetSendShare
Previous Post

சமூக ஆர்வலர் மேதா பத்கருக்கு 5 மாதம் சிறை தண்டனை!

Next Post

மக்களவை விதிகளை ராகுல் கடைப்பிடிக்க வேண்டும்!- கிரண் ரிஜிஜு

Related News

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies