சனாதனம் தழைக்க வேண்டி உத்ரகாண்டில் இருந்து ராமேஸ்வரம் வரை தவழ்ந்தே செல்லும் பயணத்தை ராஜஸ்தான் சேர்ந்தவர் மேற்கொண்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இராஜகிரி மகாராஜ் என்பவர், இந்தியாவில் சனாதனத்தின் மரபுகளை எழுப்பவதற்காகவும், நாட்டில் அமைதி, சகோதரத்துவம், போன்றவை மேம்படுவதற்காவும் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்திரியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கிய சுமார் 3 ஆயிரத்து 800 கிலோ மீட்டர் தூர பயணத்தை தொடங்கியுள்ளார்.
தினம் ஒரு நாளைக்கு 15 கி.மீ வீதம் தவழ்ந்து செல்லும் இவர், தற்போது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடைந்தார். இதனைதொடர்ந்து வரும் 15-ம் தேதி ராமேஸ்வரத்தில் தமது பயணத்தை நிறைவு செய்தார்.