நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசிய சில பகுதி அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை மக்களவையில் பாஜக எம்பி அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அக்னிபாத் திட்டம், விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை குறிப்பிட்டு மத்திய அரசை சாடினார். இதற்கு அந்தந்த துறை அமைச்சர்கள் குறுக்கிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசிய சில பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்துக்கள், பிரதமர் மோடி, பாஜக, ஆர்எஸ்எஸ் குறித்த பேச்சில் சில பகுதிகளை நீக்க சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.