விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் செல்ல 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி கோயிலுக்கு செல்ல அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நாளை முதல் வரும் 6ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.