உதகை அரசு தலைமை மருத்துவமனையில், சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை, தெரு நாய்கள் அச்சுறுத்துகின்றன.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், சமீப காலமாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.
குறிப்பாக இரவு நேரங்களில் சுற்றித்திரியும் பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் புறநோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அச்சுறுத்தும் விதமாக சுற்றி வருகின்றன.
எனவே தெருநாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.