உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தொடர்மழை காரணமாக ராம கங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், மின்சார விநியோகமும், குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
வரும் 5-ம் தேதி வரை மழை தொடருமென இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.