தமிழக கள்ளச்சாராய உயிரிழப்பு பற்றி நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஏன் கேள்வி எழுப்பவில்லை என பா.ஜ.க மேலிட இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்
சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற ‘’என் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று’’ என்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க மேலிட இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் நேரில் சென்று பார்க்கவில்லை? என கேள்வி எழுப்பினார். நாளை நடைபெறவுள்ள பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.