தமிழ்நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த மாதமே இது குறித்து தாம் சுட்டிக்காட்டி இருந்ததை குறிப்பிட்டுள்ளார்.
ரேஷன் பொருட்கள் விநியோகத்தை சீர்செய்யாத திமுக அரசுக்கு தமது கண்டனத்தை அவர் பதிவு செய்துள்ளார். “ரேஷன் பொருட்களை முறையாக கொள்முதல் செய்து விநியோகிப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது?” என்றும் அவர் எடப்பாடி பழனிசாமி கேள்வியுள்ளார்.
“பொது மக்கள் மீது துளியும் அக்கறையற்ற அரசு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, “அனைத்து ரேஷன் பொருட்களும் மக்களை சென்றடைவதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிசெய்ய வேண்டும்” என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.