கெயர் ஸ்டாமர் வெற்றியின் ரகசியம்!
Mar 19, 2026, 05:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கெயர் ஸ்டாமர் வெற்றியின் ரகசியம்!

Murugesan M by Murugesan M
Jul 6, 2024, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாற்றம் என்ற ஒற்றைச் சொல்லை வைத்து , பிரிட்டன் அரசியலையே மாற்றிக் காட்டியிருக்கிறார், கெயர் ஸ்டாமர். அவர் தலைமையிலான தொழிலாளர் கட்சி 410 இடங்களில் வெற்றி பெற்றதால் கெயர் ஸ்டாமர் பிரிட்டன் பிரதமராகி உள்ளார். இந்த சாதனையை படைத்த கெயர் ஸ்டாமர் யார்? அவரது பின்னணி பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

61 வயதான பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டாமர், தேர்தல் பிரச்சாரத்தின் போது, சிறுவயதில் தனது குடும்பத்தில் கடுமையான நிதி நெருக்கடிகளைச் சந்தித்ததாக தெரிவித்திருந்தார்.

1962ம் ஆண்டு, செப்டம்பர் 2ம் தேதி லண்டன் புறநகரில் உள்ள சவுத் வார்க்கில் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் கெயர் ஸ்டாமர். அவரது தந்தை rodney starmer சிறிய தொழிற்சாலையில் பணியில் இருந்தார். செவிலியராக இருந்த தாய் josephine நீண்ட காலமாகவே அரியவகை நோயால் பாதிக்கப் பட்டிருந்தார். சிறுவயதில், தந்தையின் தொழிலுக்கு உதவியாகவும், தாயாருக்கு பணிவிடை செய்பவருமான இருந்துவந்துள்ளார் கெயர் ஸ்டாமர்.

குடும்பத்தில் முதல் பட்டதாரியான கெயர் ஸ்டாமர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற பின்னர், மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சட்ட ஆலோசகராக பணி புரிந்திருக்கிறார்.

இங்கிலாந்தின் உயரிய விருதான ‘சர்’ பட்டம் பெற்ற கெயர் ஸ்டாமர் 2015 ஆம் ஆண்டு முதன்முறையாக தொழிலாளர் கட்சியின் சார்பில் தேர்தலில் நின்றார். போட்டியிட்ட முதல் தேர்தலில் 17,048 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிரிட்டன் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். இந்த தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன் அவரது தாயார் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது வழக்குகள் இயக்குநராகவும் பணியில் திறமையாக செயல்பட்டு பலரது பாராட்டுக்களைப் பெற்றிருந்தார் கெயர் ஸ்டாமர்.

அல்-கொய்தா இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான பிரிட்டனின் முதல் வழக்கை இவர் கையாண்ட விதத்தால் பிரிட்டனின் 9/11 தவிர்க்கப்பட்டதாக இன்றும் பிரிட்டன் மக்கள் இவரைக் கடவுள் போல் பார்க்கின்றனர்.

ஸ்டார்மர் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செலவுகள் மற்றும் தொலைபேசிஒட்டுக் கேட்பு ஊழல்கள் உள்ளிட்ட பல உயர்மட்ட வழக்குகளை வெற்றிகரமாக கையாண்டார். மேலும் கன்சர்வேட்டிவ் கட்சியின் ஊழல்களை அம்பலப்படுத்திய இவர், தொழிலாளர் கட்சியின் அரசியல் வாதிகளுக்கும் எதிரான குற்றச் சாட்டுக்களை முன்வைத்தார்.

2011 ஆம் ஆண்டில் கறுப்பினத்தவர் ஒருவர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து லண்டனில் பெரும் கலவரம் ஏற்பட்டது. வடக்கு அயர்லாந்திலும் ஏற்பட்ட இதேபோல் ஒரு பிரச்சனை ஏற்பட்டு கலவரத்தைத் தூண்டியது. இதை எல்லாம் சுமுகமாக சமாளித்து, பிரிட்டனில் அமைதியை நிலைநாட்டிய பெருமை கெயர் ஸ்டாமருக்கு உண்டு.

ஐந்து வெவ்வேறு பிரதமர்களின் கீழ் 14 ஆண்டுகள் குழப்பமான ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் மீண்டும் கூறிய கெயர் ஸ்டாமர், கன்சர்வேடிவ் அரசு விட்டுச்சென்ற பிரச்சினைகளை தீர்க்க, nation first என்ற அடிப்படையில் “முதலில் நாடு , பிறகு கட்சி ” என்று பிரச்சாரம் செய்தார்.

16 வயதில் கட்சியில் சேர்ந்து, பல எதிர்ப்புகளுக்கிடையே மெல்ல மெல்ல முன்னேறி , 2020 ஆம் ஆண்டு, தொழிலாளர் கட்சியின் தலைவரானார். 14 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் இருந்த தொழிலாளர் கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் நம்பிக்கைக்குரிய கட்சியாக மாற்றிக் காட்டி, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் கெயர் ஸ்டாமர்.

Tags: Keir Stammer's Secret to Success!
ShareTweetSendShare
Previous Post

ஜூலை 23-இல் மத்திய பட்ஜெட் தாக்கல்!

Next Post

ஆர்ம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை பின்னணி என்ன?

Related News

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies