மத்திய பட்ஜெட் வரும் 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
நிகழாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால், கடந்த பிப்ரவரியில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், மீண்டும் பாஜக ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து, வரும் 23-ஆம் தேதி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான மத்திய அரசின் தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்ததாகவும், அந்த வகையில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஜூலை 22-இல் தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் எக்ஸ் தள பதிவில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட் வரும் 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.