மாணவர்கள் எப்போதும் பணிவுடனும், கேள்வி கேட்கும் மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும்! - குடியரசுத் தலைவர்
Aug 24, 2025, 02:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணவர்கள் எப்போதும் பணிவுடனும், கேள்வி கேட்கும் மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும்! – குடியரசுத் தலைவர்

Web Desk by Web Desk
Jul 9, 2024, 03:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 13-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர்,

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், குறுகிய காலத்தில் கல்வி உலகில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை உருவாக்கியுள்ளது என்று கூறினார்.

அறிவியலின் பகுத்தறிவு மற்றும் பாரம்பரியத்தின் மதிப்புகளை ஒருங்கிணைத்து இந்த நிறுவனம் முன்னேறி வருவதாக அவர் தெரிவித்தார்.

கல்வியும், அறிவும் மட்டுமே மனிதகுலத்தின் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார். மகாத்மா காந்தி ஏழு சமூக பாவங்களை வரையறுத்துள்ளதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.

அவற்றில் ஒன்று இரக்கமற்ற அறிவியல் என்று கூறிய அவர், மனிதாபிமானம் குறித்த உணர்வு இல்லாமல் அறிவியலை ஊக்குவிப்பது பாவம் செய்வதற்கு சமம் என்பது காந்திஜியின் கருத்து என தெரிவித்தார்.

மாணவர்கள் எப்போதும் பணிவுடனும், கேள்வி கேட்கும் மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும் என்று குடியரசுத்தலைவர் அறிவுறுத்தினார். அவர்கள் தங்கள் அறிவை சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அறிவியல் நன்மைகளுடன் தீமைகளையும் கொண்டுள்ளது என்று கூறிய அவர், தற்போது அறிவியல் தொழில்நுட்பத் துறையில் மிக விரைவான மாற்றங்கள் நிகழ்ந்து வருவதைச் சுட்டிக்காட்டினார்.

புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மனித சமூகத்திற்கு வசதிகளை வழங்கும் அதே நேரத்தில், அவை மனிதகுலத்திற்கு புதிய சவால்களையும் உருவாக்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

அடிப்படை அறிவியல் துறையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகளின் முடிவுகள் கிடைக்க நீண்ட காலம் ஆவதாக குடியரசுத் தலைவர் கூறினார்.

மாணவர்கள் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், ஒருபோதும் சோர்வடையக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார். அடிப்படை ஆராய்ச்சியின் முன்னேற்றங்கள் பல துறைகளுக்கும் பயனளிக்கும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கேட்டுக் கொண்டார்.

Tags: Students should always be humble and have a questioning attitude! - President of the Republic
ShareTweetSendShare
Previous Post

கலைஞர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Next Post

உத்தரகாண்ட் வெள்ளம்!- முதல்வர் தாமி ஹெலிகாப்டரில் ஆய்வு!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies