மாணவர்கள் எப்போதும் பணிவுடனும், கேள்வி கேட்கும் மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும்! - குடியரசுத் தலைவர்
Mar 20, 2026, 12:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணவர்கள் எப்போதும் பணிவுடனும், கேள்வி கேட்கும் மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும்! – குடியரசுத் தலைவர்

Murugesan M by Murugesan M
Jul 9, 2024, 03:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 13-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர்,

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், குறுகிய காலத்தில் கல்வி உலகில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை உருவாக்கியுள்ளது என்று கூறினார்.

அறிவியலின் பகுத்தறிவு மற்றும் பாரம்பரியத்தின் மதிப்புகளை ஒருங்கிணைத்து இந்த நிறுவனம் முன்னேறி வருவதாக அவர் தெரிவித்தார்.

கல்வியும், அறிவும் மட்டுமே மனிதகுலத்தின் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார். மகாத்மா காந்தி ஏழு சமூக பாவங்களை வரையறுத்துள்ளதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.

அவற்றில் ஒன்று இரக்கமற்ற அறிவியல் என்று கூறிய அவர், மனிதாபிமானம் குறித்த உணர்வு இல்லாமல் அறிவியலை ஊக்குவிப்பது பாவம் செய்வதற்கு சமம் என்பது காந்திஜியின் கருத்து என தெரிவித்தார்.

மாணவர்கள் எப்போதும் பணிவுடனும், கேள்வி கேட்கும் மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும் என்று குடியரசுத்தலைவர் அறிவுறுத்தினார். அவர்கள் தங்கள் அறிவை சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அறிவியல் நன்மைகளுடன் தீமைகளையும் கொண்டுள்ளது என்று கூறிய அவர், தற்போது அறிவியல் தொழில்நுட்பத் துறையில் மிக விரைவான மாற்றங்கள் நிகழ்ந்து வருவதைச் சுட்டிக்காட்டினார்.

புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மனித சமூகத்திற்கு வசதிகளை வழங்கும் அதே நேரத்தில், அவை மனிதகுலத்திற்கு புதிய சவால்களையும் உருவாக்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

அடிப்படை அறிவியல் துறையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகளின் முடிவுகள் கிடைக்க நீண்ட காலம் ஆவதாக குடியரசுத் தலைவர் கூறினார்.

மாணவர்கள் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், ஒருபோதும் சோர்வடையக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார். அடிப்படை ஆராய்ச்சியின் முன்னேற்றங்கள் பல துறைகளுக்கும் பயனளிக்கும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கேட்டுக் கொண்டார்.

Tags: Students should always be humble and have a questioning attitude! - President of the Republic
ShareTweetSendShare
Previous Post

கலைஞர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Next Post

உத்தரகாண்ட் வெள்ளம்!- முதல்வர் தாமி ஹெலிகாப்டரில் ஆய்வு!

Related News

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

Load More

அண்மைச் செய்திகள்

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies