மாணவர்கள் எப்போதும் பணிவுடனும், கேள்வி கேட்கும் மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும்! - குடியரசுத் தலைவர்
Oct 10, 2025, 10:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணவர்கள் எப்போதும் பணிவுடனும், கேள்வி கேட்கும் மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும்! – குடியரசுத் தலைவர்

Web Desk by Web Desk
Jul 9, 2024, 03:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 13-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர்,

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், குறுகிய காலத்தில் கல்வி உலகில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை உருவாக்கியுள்ளது என்று கூறினார்.

அறிவியலின் பகுத்தறிவு மற்றும் பாரம்பரியத்தின் மதிப்புகளை ஒருங்கிணைத்து இந்த நிறுவனம் முன்னேறி வருவதாக அவர் தெரிவித்தார்.

கல்வியும், அறிவும் மட்டுமே மனிதகுலத்தின் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார். மகாத்மா காந்தி ஏழு சமூக பாவங்களை வரையறுத்துள்ளதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.

அவற்றில் ஒன்று இரக்கமற்ற அறிவியல் என்று கூறிய அவர், மனிதாபிமானம் குறித்த உணர்வு இல்லாமல் அறிவியலை ஊக்குவிப்பது பாவம் செய்வதற்கு சமம் என்பது காந்திஜியின் கருத்து என தெரிவித்தார்.

மாணவர்கள் எப்போதும் பணிவுடனும், கேள்வி கேட்கும் மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும் என்று குடியரசுத்தலைவர் அறிவுறுத்தினார். அவர்கள் தங்கள் அறிவை சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அறிவியல் நன்மைகளுடன் தீமைகளையும் கொண்டுள்ளது என்று கூறிய அவர், தற்போது அறிவியல் தொழில்நுட்பத் துறையில் மிக விரைவான மாற்றங்கள் நிகழ்ந்து வருவதைச் சுட்டிக்காட்டினார்.

புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மனித சமூகத்திற்கு வசதிகளை வழங்கும் அதே நேரத்தில், அவை மனிதகுலத்திற்கு புதிய சவால்களையும் உருவாக்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

அடிப்படை அறிவியல் துறையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகளின் முடிவுகள் கிடைக்க நீண்ட காலம் ஆவதாக குடியரசுத் தலைவர் கூறினார்.

மாணவர்கள் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், ஒருபோதும் சோர்வடையக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார். அடிப்படை ஆராய்ச்சியின் முன்னேற்றங்கள் பல துறைகளுக்கும் பயனளிக்கும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கேட்டுக் கொண்டார்.

Tags: Students should always be humble and have a questioning attitude! - President of the Republic
ShareTweetSendShare
Previous Post

கலைஞர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Next Post

உத்தரகாண்ட் வெள்ளம்!- முதல்வர் தாமி ஹெலிகாப்டரில் ஆய்வு!

Related News

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

வெனிசுலா பெண்மணிக்கு “அமைதிக்கான நோபல் பரிசு” : குட்டிக்கரணம் அடித்த ட்ரம்புக்கு ஏமாற்றம்!

காவலாளி TO சாப்ட்வேர் என்ஜினீயர் : இளைஞனின் வாழ்க்கையை மாற்றிய ZOHO நிறுவனம்!

வியக்க வைத்த ராணுவ சாதன சர்வதேச மாநாடு : காட்சிப்படுத்தப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் தளவாடங்கள்!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் – கோட்டை விட்ட தமிழக அரசு!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை : தர்மம் வென்றது – எல்.முருகன் 

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்திருக்கிறது – அண்ணாமலை

நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை- நீதிபதி ஆணை!

ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்- பாகிஸ்தானுக்கு முத்தகி எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானிற்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கிய இந்தியா !

தூங்குவதற்கு முன்பு பல் துலக்குங்கள் – எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்!

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies