ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை!
Oct 19, 2025, 07:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை!

Web Desk by Web Desk
Jul 10, 2024, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

sniper rifle ரக துப்பாக்கிகளை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை இந்தியா பெற்றிருக்கிறது. sniper rifle ரக துப்பாக்கிகளுடன், பல நாடுகளுக்கு சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெடிமருந்துகளை ஏற்றுமதி செய்யவும் ஒப்பந்தம் செய்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் பல துறைகளிலும் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது. குறிப்பாக , இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, 2023-24 ஆம் ஆண்டில் சுமார் ரூ.1.27 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது.

10 ஆண்டுகளுக்கு முன் வரை ,இராணுவத் தளவாடங்களை இந்தியா இறக்குமதி செய்து வந்தது. இப்போது இந்தியா சிறிய ஆயுதங்கள் முதல் பீரங்கிகள், துப்பாக்கிகள், ஏவுகணைகள் வரை ஏராளமான இராணுவத் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கிறது. மேலும் இராணுவ தளவாடங்களை ஏற்றுமதியும் செய்கிறது.

அந்த வகையில், கர்நாடகாவை சேர்ந்த, SSS DEFENCE என்னும் நிறுவனம் .338 Lapua Magnum ஆற்றலுள்ள sniper rifle எனப்படும் துப்பாக்கிகளை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கிறது. மேலும் பல நாடுகளுடன் வெடிமருந்துகள் ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி இருக்கின்றன.

இராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் தன்னிறைவை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இது பார்க்கப் படுகிறது.

பெங்களூரில் உள்ள SSS DEFENCE என்னும் நிறுவனம், இந்தியாவை ஒரு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக நிலைநிறுத்த, ‘மேக் இன் இந்தியா’ முயற்சியில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.

இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் ஆயுத ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப் பட்டதாக தெரிவிக்கும் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சதீஷ், 1,500 மீட்டர் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கும் sniper rifle ஏற்றுமதி என்பது இந்தியாவின் மிகப் பெரிய சாதனை என்று தெரிவித்திருக்கிறார்.

sniper rifle ரக துப்பாக்கிகள், நவீன போரின் முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. துல்லியமாக குறிவைக்கும் திறனால், sniper rifle இராணுவ வீரர்களால் விரும்பப் படுகிறது. இந்திய இராணுவத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இந்த sniper rifle ரக துப்பாக்கிகள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன

சுமார் 30க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த .338 Lapua Magnum sniper rifle யை பயன்படுத்தி வருகிறது. எனவே , இந்தவகை துப்பாக்கிகளின் தேவை அதிகம். இனி இந்த ரக துப்பாக்கிகளின் ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருக்கும் என்று உறுதியாக கூறப்படுகிறது.

ரஷ்யா – உக்ரைன் போர் நடந்து வருவதால், பல நாடுகளுக்கு ஆயுதங்கள் தேவைப் படுகின்றன. அதனால் இந்தியாவின் இராணுவ ஏற்றுமதி வளர்ச்சி அடைந்துள்ளன.

SSS DEFENCE உருவாக்கி உள்ள இந்த sniper rifle ரக துப்பாக்கிகள், இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு உதவுவது மட்டுமல்லாமல், ஆயுத ஏற்றுமதிக்கான களத்தையும் உருவாக்கி தந்துள்ளது.

மேலும் சர்வதேச இராணுவப் பாதுகாப்புத் துறையில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

Tags: India's new record in arms exports!
ShareTweetSendShare
Previous Post

கார் விலையை குறைத்த மகேந்திரா!

Next Post

தப்பிய போலே பாபா ஜாதி அரசியல் காரணமா?

Related News

திருப்பூர் பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் – பயணிகளை வரிசையாக நிற்க வைத்து அனுப்பிய போலீசார்!

தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்கள் – தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!

கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

பெற்றோர்களே உஷார் : எல்லை மீறும் ChatGPT- சிறப்பு தொகுப்பு!

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

திக்…திக்..திக்…சிதிலமடைந்த குடியிருப்புகள்.. திகிலுடன் வாழும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

சொந்த ஊர் செல்ல போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது – நிர்மலா சீதாராமன் பேட்டி!

தீபாவளி பண்டிகை உற்சாகம் – சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்  பட்டாசுகளை வாங்க குவிந்த மக்கள்!

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள் குளிக்க தடை!

தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!

திருவாடானை அருகே லஞ்சம் கேட்டு மிரட்டும் வருவாய் ஆய்வாளர்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies