தப்பிய போலே பாபா ஜாதி அரசியல் காரணமா?
Sep 1, 2026, 11:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தப்பிய போலே பாபா ஜாதி அரசியல் காரணமா?

Murugesan M by Murugesan M
Jul 11, 2024, 08:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரத்தில் போலே பாபா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கு பின்னால் வாங்கு வங்கி அரசியல் இருப்பதாக கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் பஹதூர்பூரைச் சேர்ந்தவர் சாமியார் போலே பாபா. முன்னாள் காவலரான இவர், அந்தப் பணியை விட்டுவிட்டு ஆன்மிகத்துக்கு வந்தவர். அவருக்கென்று லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி ஹத்ராஸில் போலே பாபா நிகழ்த்திய சொற்பொழிவில் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்து போலே பாபா கிளம்பிய போது அவரது காலடி மண்ணை சேகரிப்பதற்காக பலர் முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 112 பெண்கள் உட்பட 121 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் போலே பாபா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையிலோ, சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையிலோ அவரது பெயர் இடம்பெறவில்லை. அனுமதிக்கப்பட்டதைவிட அதிக எண்ணிக்கையில் மக்களை அழைத்தது, போதிய ஏற்பாடுகளை செய்யாதது, கூட்டம் நடக்கும் இடத்தை சரியாக ஆய்வு செய்யாதது என அனைத்துக்கும் ஏற்பாட்டாளர்களே காரணம் என்று கூறுகிறது சிறப்பு புலனாய்வுக் குழுவின் 300 பக்க அறிக்கை.

இதற்கு பின்னால் பட்டியலின அரசியல் இருப்பதாக தெரிகிறது. அந்த சமூகத்தைச் சேர்ந்த போலே பாபாவுக்கு அம்மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. அதன்காரணமாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எந்த கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் இந்த விவகாரத்தில் போலே பாபாவின் பெயரை இழுக்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மட்டுமே பாபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை சாதி மற்றும் மதம் ஆகியவை வாக்கு வங்கி அரசியலில் முக்கிய பங்காற்றுகின்றன. அம்மாநில கிராமங்களில் 30 விழுக்காடு அளவுக்கு பட்டியலின மக்கள் வசிப்பதாக தெரிகிறது.

அதில் 60 விழுக்காட்டினர் போலே பாபாவின் ஜாதவ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே கூட்ட நெரிசல் விவகாரத்தில் அவர் மீது நடவடிக்கை எடுத்தால் 2026 உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதால் அரசியல் கட்சிகள் பின்வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Is it because of Baba caste politics that escaped?
Share
Tweet
SendShare
Previous Post

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை!

Next Post

வேலைவாய்ப்பு குறைவா? பொய் தகவல் பரப்புவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies