தப்பிய போலே பாபா ஜாதி அரசியல் காரணமா?
Jul 5, 2026, 06:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தப்பிய போலே பாபா ஜாதி அரசியல் காரணமா?

Murugesan M by Murugesan M
Jul 11, 2024, 08:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரத்தில் போலே பாபா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கு பின்னால் வாங்கு வங்கி அரசியல் இருப்பதாக கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் பஹதூர்பூரைச் சேர்ந்தவர் சாமியார் போலே பாபா. முன்னாள் காவலரான இவர், அந்தப் பணியை விட்டுவிட்டு ஆன்மிகத்துக்கு வந்தவர். அவருக்கென்று லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி ஹத்ராஸில் போலே பாபா நிகழ்த்திய சொற்பொழிவில் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்து போலே பாபா கிளம்பிய போது அவரது காலடி மண்ணை சேகரிப்பதற்காக பலர் முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 112 பெண்கள் உட்பட 121 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் போலே பாபா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையிலோ, சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையிலோ அவரது பெயர் இடம்பெறவில்லை. அனுமதிக்கப்பட்டதைவிட அதிக எண்ணிக்கையில் மக்களை அழைத்தது, போதிய ஏற்பாடுகளை செய்யாதது, கூட்டம் நடக்கும் இடத்தை சரியாக ஆய்வு செய்யாதது என அனைத்துக்கும் ஏற்பாட்டாளர்களே காரணம் என்று கூறுகிறது சிறப்பு புலனாய்வுக் குழுவின் 300 பக்க அறிக்கை.

இதற்கு பின்னால் பட்டியலின அரசியல் இருப்பதாக தெரிகிறது. அந்த சமூகத்தைச் சேர்ந்த போலே பாபாவுக்கு அம்மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. அதன்காரணமாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எந்த கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் இந்த விவகாரத்தில் போலே பாபாவின் பெயரை இழுக்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மட்டுமே பாபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை சாதி மற்றும் மதம் ஆகியவை வாக்கு வங்கி அரசியலில் முக்கிய பங்காற்றுகின்றன. அம்மாநில கிராமங்களில் 30 விழுக்காடு அளவுக்கு பட்டியலின மக்கள் வசிப்பதாக தெரிகிறது.

அதில் 60 விழுக்காட்டினர் போலே பாபாவின் ஜாதவ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே கூட்ட நெரிசல் விவகாரத்தில் அவர் மீது நடவடிக்கை எடுத்தால் 2026 உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதால் அரசியல் கட்சிகள் பின்வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Is it because of Baba caste politics that escaped?
ShareTweetSendShare
Previous Post

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை!

Next Post

வேலைவாய்ப்பு குறைவா? பொய் தகவல் பரப்புவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

Related News

இந்தியாவை உலகளாவிய உயர் தொழில்நுட்ப உற்பத்தி மையமாக மாற்றுவதில் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியம் – பிரதமர் மோடி

ஜூலை 20ம் தேதி கூடும் நாடாளுமன்றம்; முக்கிய மசோதாக்கள் நிறைவேற வாய்ப்பு

வென்ற தீர வேண்டும்; நிர்வாகிகளிடம் இபிஎஸ் வலியுறுத்தல்

தவெகவில் சேரக் கூறி அழுத்தம்; அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

125 ஆண்டுகள் பழமையான குருத்வாராவை இடித்த பாகிஸ்தான் : இந்தியா கடும் கண்டனம் – சிறப்பு தொகுப்பு!

சீனாவை கழற்றிவிடும் ஜப்பான் : பிரதமர் மோடி- தகாய்ச்சி சந்திப்பின் பின்னணி – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

த.வெ.க. எம்.எல்.ஏவிடம் ரூ.35 கோடி பேரம் – சென்னையில் சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

நடிகர் ரவி மோகன் இல்லத்தில் நகை திருட்டு வழக்கு – ஓட்டுனர் கைது!

இன்றைய தங்கம் விலை!

போதைப் பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகாமல் இருக்க ஏபிவிபி சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – பணி நியமன ஆணைகளை வழங்கும் முதலமைச்சர்!

கோயில் புதுப்பிக்கும் பணிக்கு ஒரு லட்சம் லஞ்சம் – தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது!

நீங்கள் நிர்வாகம் கற்றுக் கொள்வதற்குள், இன்னும் எத்தனை தலைகள் உருள வேண்டும் – முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமர்நாத் யாத்திரை – ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!

பொன்முடிக்கு எதிரான வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies