வேலைவாய்ப்பு குறைவா? பொய் தகவல் பரப்புவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Sep 1, 2026, 10:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலைவாய்ப்பு குறைவா? பொய் தகவல் பரப்புவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Jul 11, 2024, 09:50 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வேலை வாய்ப்புகளை உருவாக்க போராடும் இந்தியா என்ற சிட்டிகுரூப்பின் அறிக்கையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நிராகரித்துள்ளது. மேலும், அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களையும் தரவுகளையும் சிட்டிகுரூப் கணக்கிடத் தவறிவிட்டதாகவும் மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது.

அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

சிட்டி குரூப்பின் பொருளாதார வல்லுனர்களான (Samiran Chakraborty) சாமிரன் சக்ரவர்த்தி மற்றும் (Baqar Zaidi) பக்கார் ஜைதி சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் 7 சதவீத வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில், ஆண்டுக்கு எட்டிலிருந்து ஒன்பது மில்லியன் வேலை வாய்ப்புக்களை மட்டுமே இந்தியாவால் உருவாக்க முடியும் என்று கூறியிருந்தனர்.

பொய்யான தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த அறிக்கையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நிராகரித்துள்ளது.

இந்தியாவின் வேலை சூழ்நிலையைச் சிதைக்கும் விதமாக, ஆதாரமின்றி வெளியிடப்படும் அறிக்கைகள் வெளியிடுவோரை மத்திய அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.

மேலும், Periodic Labour Force Survey எனப்படும், ‘காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு மற்றும் capital, labour, energy, materials and service அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கியின் K.L.E.M.S தரவுகள் போன்ற அதிகாரப்பூர்வ தகவல்களை கணக்கில் எடுக்காமல் இந்த அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆண்டுக்கு சராசரியாக 2 கோடி வேலை வாய்ப்புகள் என்ற கணக்கில், 2017-18 முதல் 2021-22 வரை 8 கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை இந்தியா உருவாக்கி இருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் வேகமாக குறைந்து வருவதாக கூறியுள்ள மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், உற்பத்தி, சேவைகள், உள்கட்டமைப்பு மிக வேகமாக வேலைவாய்ப்புக்களை உருவாக்கி வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா மூலமாக வேலை மற்றும் சேவைகளில் வேலை வாய்ப்புக்கள் கணிசமாக உயர்ந்து வருகிறது. EPFO ​​மற்றும் NPS தரவுகளும் இந்தியாவில் வேலைவாய்ப்பு விகிதம் அதிகரித்து வருவதையே காட்டுகின்றன.

இதற்கிடையில், கடந்த ஜூலை மாதம் 8ம் தேதி வெளிவந்த இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் , 2023-24 நிதியாண்டில் இந்தியாவில் 46.7 மில்லியன் வேலைகள் உருவாக்கப் பட்டுள்ளதாகவும், இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்பு 643.3 மில்லியனாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Lack of employment? Central government warning to spreaders of false information!
Share
Tweet
SendShare
Previous Post

தப்பிய போலே பாபா ஜாதி அரசியல் காரணமா?

Next Post

இந்தியா வந்தடைந்தார் பிரதமர் மோடி!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies