தப்பிய போலே பாபா ஜாதி அரசியல் காரணமா?
Oct 19, 2025, 12:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தப்பிய போலே பாபா ஜாதி அரசியல் காரணமா?

Web Desk by Web Desk
Jul 11, 2024, 08:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரத்தில் போலே பாபா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கு பின்னால் வாங்கு வங்கி அரசியல் இருப்பதாக கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் பஹதூர்பூரைச் சேர்ந்தவர் சாமியார் போலே பாபா. முன்னாள் காவலரான இவர், அந்தப் பணியை விட்டுவிட்டு ஆன்மிகத்துக்கு வந்தவர். அவருக்கென்று லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி ஹத்ராஸில் போலே பாபா நிகழ்த்திய சொற்பொழிவில் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்து போலே பாபா கிளம்பிய போது அவரது காலடி மண்ணை சேகரிப்பதற்காக பலர் முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 112 பெண்கள் உட்பட 121 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் போலே பாபா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையிலோ, சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையிலோ அவரது பெயர் இடம்பெறவில்லை. அனுமதிக்கப்பட்டதைவிட அதிக எண்ணிக்கையில் மக்களை அழைத்தது, போதிய ஏற்பாடுகளை செய்யாதது, கூட்டம் நடக்கும் இடத்தை சரியாக ஆய்வு செய்யாதது என அனைத்துக்கும் ஏற்பாட்டாளர்களே காரணம் என்று கூறுகிறது சிறப்பு புலனாய்வுக் குழுவின் 300 பக்க அறிக்கை.

இதற்கு பின்னால் பட்டியலின அரசியல் இருப்பதாக தெரிகிறது. அந்த சமூகத்தைச் சேர்ந்த போலே பாபாவுக்கு அம்மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. அதன்காரணமாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எந்த கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் இந்த விவகாரத்தில் போலே பாபாவின் பெயரை இழுக்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மட்டுமே பாபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை சாதி மற்றும் மதம் ஆகியவை வாக்கு வங்கி அரசியலில் முக்கிய பங்காற்றுகின்றன. அம்மாநில கிராமங்களில் 30 விழுக்காடு அளவுக்கு பட்டியலின மக்கள் வசிப்பதாக தெரிகிறது.

அதில் 60 விழுக்காட்டினர் போலே பாபாவின் ஜாதவ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே கூட்ட நெரிசல் விவகாரத்தில் அவர் மீது நடவடிக்கை எடுத்தால் 2026 உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதால் அரசியல் கட்சிகள் பின்வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Is it because of Baba caste politics that escaped?
ShareTweetSendShare
Previous Post

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை!

Next Post

வேலைவாய்ப்பு குறைவா? பொய் தகவல் பரப்புவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

Related News

பெற்றோர்களே உஷார் : எல்லை மீறும் ChatGPT- சிறப்பு தொகுப்பு!

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

திக்…திக்..திக்…சிதிலமடைந்த குடியிருப்புகள்.. திகிலுடன் வாழும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

சொந்த ஊர் செல்ல போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது – நிர்மலா சீதாராமன் பேட்டி!

தீபாவளி பண்டிகை உற்சாகம் – சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்  பட்டாசுகளை வாங்க குவிந்த மக்கள்!

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள் குளிக்க தடை!

தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!

திருவாடானை அருகே லஞ்சம் கேட்டு மிரட்டும் வருவாய் ஆய்வாளர்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு திறப்பு!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஆற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies