தப்பிய போலே பாபா ஜாதி அரசியல் காரணமா?
Mar 20, 2026, 01:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தப்பிய போலே பாபா ஜாதி அரசியல் காரணமா?

Murugesan M by Murugesan M
Jul 11, 2024, 08:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரத்தில் போலே பாபா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கு பின்னால் வாங்கு வங்கி அரசியல் இருப்பதாக கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் பஹதூர்பூரைச் சேர்ந்தவர் சாமியார் போலே பாபா. முன்னாள் காவலரான இவர், அந்தப் பணியை விட்டுவிட்டு ஆன்மிகத்துக்கு வந்தவர். அவருக்கென்று லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி ஹத்ராஸில் போலே பாபா நிகழ்த்திய சொற்பொழிவில் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்து போலே பாபா கிளம்பிய போது அவரது காலடி மண்ணை சேகரிப்பதற்காக பலர் முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 112 பெண்கள் உட்பட 121 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் போலே பாபா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையிலோ, சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையிலோ அவரது பெயர் இடம்பெறவில்லை. அனுமதிக்கப்பட்டதைவிட அதிக எண்ணிக்கையில் மக்களை அழைத்தது, போதிய ஏற்பாடுகளை செய்யாதது, கூட்டம் நடக்கும் இடத்தை சரியாக ஆய்வு செய்யாதது என அனைத்துக்கும் ஏற்பாட்டாளர்களே காரணம் என்று கூறுகிறது சிறப்பு புலனாய்வுக் குழுவின் 300 பக்க அறிக்கை.

இதற்கு பின்னால் பட்டியலின அரசியல் இருப்பதாக தெரிகிறது. அந்த சமூகத்தைச் சேர்ந்த போலே பாபாவுக்கு அம்மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. அதன்காரணமாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எந்த கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் இந்த விவகாரத்தில் போலே பாபாவின் பெயரை இழுக்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மட்டுமே பாபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை சாதி மற்றும் மதம் ஆகியவை வாக்கு வங்கி அரசியலில் முக்கிய பங்காற்றுகின்றன. அம்மாநில கிராமங்களில் 30 விழுக்காடு அளவுக்கு பட்டியலின மக்கள் வசிப்பதாக தெரிகிறது.

அதில் 60 விழுக்காட்டினர் போலே பாபாவின் ஜாதவ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே கூட்ட நெரிசல் விவகாரத்தில் அவர் மீது நடவடிக்கை எடுத்தால் 2026 உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதால் அரசியல் கட்சிகள் பின்வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Is it because of Baba caste politics that escaped?
ShareTweetSendShare
Previous Post

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை!

Next Post

வேலைவாய்ப்பு குறைவா? பொய் தகவல் பரப்புவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

Related News

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

Load More

அண்மைச் செய்திகள்

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies