இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!
Sep 10, 2026, 06:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 20, 2025, 03:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி, தியோபந்த் மதரசாவிற்கு வந்து சென்ற நிகழ்வு இந்தியாவின் மத ராஜதந்திர நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இது ஆப்கானிஸ்தான், இந்தியா இடையேயான நெருக்கத்தை அதிகப்படுத்தியதுடன், பாகிஸ்தானுக்கும் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது… அது என்ன தற்போது பார்க்கலாம்…

உத்தரபிரதேசத்தின் சாஹரன்பூரில் அமைந்துள்ள மதராசாவின் பெயர்தான் தாருல் உலூம் தியோபந்த்… இதற்கும், தாலிபான்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது… தாலிபான் தலைவர்கள் பலரும், தியோபந்தின் உள்ள மதரசா போன்று வடிவமைக்கப்பட்ட பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மகாணத்தில் உள்ள தாருல் உலூம் ஹக்கானியாவில்தான் கல்வியை பயின்றனர்… இதை நிறுவிய மவுலானா அப்துல் ஹக் என்பவர் இந்திய பிரிவினைக்கு முன்னர் தியோபந்தில் கல்வி பயின்றவர். அவரது மகன் சமி உல் ஹக், தாலிபன் அமைப்பை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்ததால், தாலிபானின் தந்தை என்று போற்றப்படுகிறார்….

சஹரன்பூரில் 1866ம் ஆண்டு அமைக்கப்பட்ட தியோபந்த் மதரசா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய போதனையில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்றாக சொல்லப்படுகிறது..

இந்த நிலையில் இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி, உத்தரபிரதேசத்தில் உள்ள தாருல் உலூம் தியோபந்திற்கு சென்றிருந்தார். பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான உறவில் பிளவு ஏற்பட்ட தருணத்தில், முத்தகியின் வருகை, முக்கியத்துவம் பெற்றது… அவரது வேண்டுகோளின்படியே அங்கு விஜயம் செய்திருந்தார்.. இது முத்தாகியின் தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும், அரசியல் ரீதியாகவும், இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது…

முத்தகியை தியோபந்திற்கு செல்ல அனுமதித்தது, தியோபந்தில், ஹதீஸைக் கற்பிக்க அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியது போன்றவை பெண் கல்வி குறித்த பாகுபாட்டை களையும் இந்தியாவின் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது… ஏனெனில், தாருல் உலூம் தியோபந்த் கல்வியில் பாலினப் பாகுபாட்டை வலியுறுத்தி வந்தாலும், தாலிபானின் தீவிரவாத சித்தாந்தத்திற்கு மாறாக, பெண்களின் கற்கும் உரிமையை ஆதரிக்கும் ஃபத்வாக்களை வரலாற்று ரீதியாக வெளியிட்டு வருகிறது..,

கடந்த காலங்களிலும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களிடையே இந்தியா இதுபோன்ற மத ராஜதந்திரத்தைப் பயன்படுத்தியிருக்கிறது… 1995ம் ஆண்டு பிரதமர் பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அரசு ஆட்சியில் இருக்குமபோது, முன்னாள் ஈரான் அதிபர் அக்பர் ஹமேஷி ரஃப் சஞ்சானி, ஷியா முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும லக்னோவுக்கு விஜயம் செய்தார். பாரா இமாம்பராவில் 10 ஆயிரம் பேர் கூடியிருந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்தியாவின் மதசார்பின்மையை ஆதரித்து பேசினார். ஈரான் அதிபர் அக்பர் ஹமேஷி ரஃப் சஞ்சானியின் உரை, இந்திய முஸ்லிம்களிடையே பதற்றத்தை தணிக்க உதவும் சைகையாக கருதப்பட்டது…

தற்போது, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் உடன் இந்தியா காட்டும் நெருக்கம், பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது…

Tags: JaishankarAfghan Foreign Minister Amir Khan MuttahidaDeoband MadrasaSaharanpurIndiapakistanuttar pradesh
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தான் ஆதரவு நாடுகளை புறக்கணிக்கும் இந்திய சுற்றுலா பயணிகள்!

Next Post

தீபாவளி பண்டிகை – காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies