ரஷ்யா, ஆஸ்திரியா பயணத்தை முடித்த பிரதமர் மோடி இந்தியா திரும்பினார்..
பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி ரஷ்யா சென்றார். அங்கு அவர் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார். பின்னர் இருநாட்டு தலைவர்களும் 22வது இந்தியா – ரஷ்யாஉச்சி மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் இருநாட்டு உறவு, வர்த்தகம், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தனர்.
இதனைதொடர்ந்து ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல்
சந்தித்தார். இந்நிலையில் அரசு முறை பயணத்தை முடித்த பிரதமர் மோடி டெல்லி வந்தடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.