கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை தூர்வாரும் பணி 58 ஆண்டுகளுக்குப் பின்னர் தொடங்கப்பட்டுள்ளது.
1961ஆம் ஆண்டு தொடங்கிய அணை கட்டுமாணப்பணி 1966 ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. 199 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணை 58 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை.
இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தூர் வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தண்ணீரில் இருந்து வண்டல் மண்ணை பிரித்தெடுக்கும் ஜியோ டியூட் என்ற தொழில்நுட்பம் மூலம் அணையை தூர்வாரும் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.