பாஜக தலைவர்களை அவமதிக்கும் விதமாக நடந்து கொள்ளும் மாநகர காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாஜகவின் கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் புகார் அளித்தார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் ஊர்வலமாக புகார் மனு அளிக்க வந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தனபால், செல்வப்பெருந்தகை குறித்து பேசிய அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களை அச்சறுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.