இங்கிலாந்து கன்சர்வேட்டிவ் தலைவர் பாப் பிளாக்மேன் ஒரு கையில் பைபிளும், மற்றொரு கையில் பகவத் கீதையும் வைத்து, எம்.பி.யாக பதவியேற்றார்.
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நேற்று (ஹவுஸ் ஆஃப் காமன்ஸில்) கன்சர்வேட்டிவ் எம்.பி பாப் பிளாக்மேன் ஒரு கையில் கிங் ஜேம்ஸ் பைபிளையும் மறுகையில் பகவத் கீதையையும் பிடித்துக்கொண்டு எச்எம் கிங் சார்லஸுக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
இது குறித்து கன்சர்வேட்டிவ் எம்.பி தனது எக்ஸ் பதிவில்,
“பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாங்கள் மீண்டும் பாராளுமன்றத்திற்குத் திரும்பியபோது, கிங் ஜேம்ஸ் பைபிள் மற்றும் கீதையின் மீது, எச்.எம். கிங் சார்லஸுக்கு விசுவாசமாக உறுதிமொழி எடுத்ததில் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பிளாக்மேன் தனது கைகளில் பகவத் கீதையுடன் சத்தியம் செய்வது இது முதல் முறை அல்ல. 2019 ஆம் ஆண்டில் முதன்முறையாக, இந்திய வம்சாவளி அல்லாத இவர், அதிக இந்து மக்கள்தொகையைக் கொண்ட ஹாரோ ஈஸ்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிளாக்மேன், பகவத் கீதையுடன் சத்தியப்பிரமாணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பகவத் கீதைக்கு மரியாதை செலுத்திய பிளாக்மேன், காமன்ஸ் சபையில் பகவத் கீதை பற்றிய உரையை நடத்திய முதல் எம்.பி. இவர்.
பாப் பிளாக்மேன் 2020- இல் தேர்தலில் வெற்றியை தொடர்ந்து, சத்தியப்பிரமாணம் செய்யும்போது ஒரு கையில் கீதாவையும் மற்றொரு கையில் பைபிளையும் பிடித்தபடி காணப்பட்டார். அந்த ஆண்டில் ரிஷி சுனக், அலோக் ஷர்மா மற்றும் ஷைலேஷ் வாரா ஆகியோர் இதையே பின்பற்றினார்கள்.
2022 இல் இங்கிலாந்தின் பிரதமராக முதல் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பதவியேற்றார். அவர் பாராளுமன்றத்தில் பகவத் கீதை வைத்து விசுவாசப் பிரமாணம் செய்தார்.
இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பாப் பிளாக்மேன், ராம் மந்திர் பற்றிய பிரிட்டிஷ் ஊடகங்களின் பாரபட்சமான அறிக்கை குறித்து கவலை தெரிவித்தார்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர்,
“உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ராமர் பிறந்த இடம் என்பதால் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
“மிகவும் துரதிர்ஷ்டவசமாக, பிபிசி, தங்கள் செய்தியில், இங்கு மசூதி இடிக்கப்பட்ட இடம் என்று கூறியது, அது நடந்ததற்கு முன்பு 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இது ஒரு கோவிலாக இருந்தது என்பதையும், முஸ்லிம்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டது என்பதையும் மறந்துவிட்டது. மேலும் நகரத்தை ஒட்டி ஒரு மசூதி அமைக்க ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது” என்று அவர் கூறினார்.