டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஜாமீன் மனுவை விசாரித்துவந்த அமர்விலிருந்து நீதிபதி சஞ்சய் குமார் விலகினார்.
டெல்லி மதுபான கொள்கை ஊழலில் மணீஷ் சிசோடியா அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவரது ஜாமீன் மனுவை விசாரித்துவந்த அமர்விலிருந்து நீதிபதி சஞ்சய் குமார் விலகினார்.
இதைத்தொடர்ந்து நீதிபதி சஞ்சய் குமார் இல்லாத வேறு ஓர் அமர்வு இந்த வழக்கை வரும் 15-ஆம் தேதி விசாரிக்கும் என நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சஞ்சய் கரோல் அமர்வு தெரிவித்துள்ளது.