வரலாற்றில் மைல்கல் வியப்பளிக்கும் விழிஞ்ஞம் துறைமுகம்!
Aug 26, 2025, 07:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரலாற்றில் மைல்கல் வியப்பளிக்கும் விழிஞ்ஞம் துறைமுகம்!

Web Desk by Web Desk
Jul 14, 2024, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் உள்ள விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கன்டெய்னர்களுடன் முதல் சரக்கு கப்பல் வந்து சேர்ந்துள்ளது. இது, இந்திய துறைமுக வரலாற்றில் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் பல்வேறு துறைமுகங்கள் இருந்தாலும் அவற்றில் பெரிய சரக்கு கப்பல்களை நிறுத்தும் வசதி இல்லை. அதனால் சிறிய கப்பல்கள் மூலம் சரக்குகள் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பெரிய கப்பல்களுக்கு மாற்றப்படும்.

இதற்காக 2016 – 2017-ஆம் ஆண்டில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக தெரிகிறது. கொரோனாவுக்கு பிறகு இந்தக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கும் இந்தியாவின் கடல்வழி வாணிபத்தை மேம்படுத்தவும் வரப்பிரசாதமாக வந்திருப்பதே விழிஞ்ஞம் துறைமுகம். இது இந்தியாவின் முதல் ஆழ்கடல் துறைமுகம் என்றழைக்கப்படுகிறது. 8 ஆயிரத்து 867 கோடி ரூபாய் மதிப்பில் அதானி குழுமத்தால் உருவாக்கப்பட்டுள்ளது விழிஞ்ஞம் துறைமுகம்.

மற்ற துறைமுகங்களைப் போல் அல்லாமல், சர்வதேச கிழக்கு – மேற்கு கப்பல் பாதையிலிருந்து வெறும் 10 கடல் மைல் தொலைவில் விழிஞ்ஞம் துறைமுகம் அமைந்திருப்பது மிகவும் சாதகமான ஒன்று. இந்தத் துறைமுகம் சர்வதேச பாதைக்கு அருகில் இருப்பதால் இது இந்தியாவின் கிரீடமாக இருக்கப்போகிறது என்றும் கணிக்கிறார்கள்.

இந்த துறைமுகத்தால் ஆண்டுக்கு 10 லட்சம் கன்டெய்னர்களை கையாள முடியும். 19 புள்ளி 7 மீட்டர் ஆழத்தை இயற்கையாகவே கொண்டிருப்பது விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு மற்றுமொரு PLUS POINT.

இதை பயன்படுத்தி கொழும்பு செல்லும் சரக்கு கப்பல்களை ஈர்க்க முடியும். மேலும் சென்னை, தூத்துக்குடி, கொச்சி துறைமுகங்களிலிருந்து இப்போது கொழும்பு வழியாக செல்லும் சரக்குகள் விழிஞ்ஞம் வழியாக செல்ல முடியும். அதனால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளரும். மற்றொருபுறம் வேலைவாய்ப்புகளும் உள்கட்டமைப்புகளும் பெருகும்.

தொழில் துறை, உற்பத்தித் துறை, போக்குவரத்து, சுற்றுலா எனப் பல்வேறு துறைகள் வளர்ச்சியடைவதற்கு விழிஞ்ஞம் துறைமுகம் காரணமாக இருக்கும்.

2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிகள் பெருமளவில் நிறைவடைந்த நிலையில், சீனாவில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கன்டெய்னர்களுடன் முதல் சரக்கு கப்பல் விழிஞ்ஞத்தை வந்தடைந்தது. San Fernando என்ற அந்த தாய்க் கப்பலுக்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடந்த இரண்டாம் தேதி சீனாவிலுள்ள சியாமென் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட San Fernando சரக்கு கப்பல் 9 நாள் பயணித்து விழிஞ்ஞத்தை அடைந்தது.

இது இந்திய துறைமுக வரலாற்றில் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதாகவும் விரைவில் முழுவீச்சில் விழிஞ்ஞம் துறைமுகம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Tags: A landmark in history is the astonishing Viinnjanam Harbour!
ShareTweetSendShare
Previous Post

அகழாய்வின் போது தந்தத்தால் ஆன ஆட்டக்காய் கண்டெடுப்பு!

Next Post

அரசுப் பேருந்தில் மழை நீர் கொட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்!

Related News

34 வாரங்களாக வாழும் 3D சிறுநீரகம் : சிறுநீரக பிரச்னைகளை தீர்க்க உதவும்!

கடலுக்குள் காற்றாலை அசத்தும் டென்மார்க் : தமிழகத்தில் வருவது எப்போது?

ஓய்வுபெறும் MiG-21 போர் விமானம் : பிரியாவிடை கொடுத்த விமானப்படை தலைவர்!

போக்குவரத்தில் புதிய புரட்சி : வியக்க வைக்கும் எதிர்கால தொழில்நுட்பம்!

உலக நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை : அமெரிக்க நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவை வரி விதிப்பா?

ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் தேசிய கருத்தரங்கம் டெல்லியில் தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

லடாக் : ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பிக் அப் வாகனம்!

திருவண்ணாமலை : பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை உருவாக்கிய பக்தர்!

இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிப்பு கொள்கையை நம்பியதில்லை : ராஜ்நாத் சிங்

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் அபராதத்துடன் விடுவிப்பு!

ராமநாதபுரம் : மூதாட்டி நிலத்தை திமுக பிரமுகர் ஆக்கிரமித்ததாக புகார்!

இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

டிரம்பின் 50% வரி விதிப்பு – ஆகஸ்ட் 27 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்!

செங்கல்பட்டு : திருட முயன்ற நபரை கட்டி வைத்து தாக்கி போலீசில் ஒப்படைத்த மக்கள்!

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5 கோடி ரூபாய் முறைகேடு!

விடியா திமுக அரசு வீழ்ந்தால் மட்டுமே தமிழகத்தின் இருள் நீங்கும் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies