அதிநவீன வசதிகளுடன் தமிழகத்தின் 2-வது பெரிய விமான நிலையமாக தூத்துக்குடி விமான நிலையம் உருவாகி வருகிறது.
தமிழகத்தில், சென்னைக்கு அடுத்து பேருந்து, ரயில், கப்பல், விமானம் என 4 வகை போக்குவரத்து வசதி உடைய தொழில் நகரமாக தூத்துக்குடி உள்ளது.
விரைவில், பர்னிச்சர் பார்க், வின்பாஸ்ட் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை, குலசேகபட்டினம் ராக்கெட் ஏவுதளம் என அடுத்தடுத்த புதிய திட்டங்களும் செயல்படுத்த உள்ளது.
இந்நிலையில், 227 புள்ளி 33 கோடி ரூபாய் மதிப்பில் புதிய விமான முனையம் அமைக்கும் பணி 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் 5 விமானங்கள் நிறுத்தும் வசதி, ஒரு மணி நேரத்தில் ஆயிரத்து 440 பயணிகளை கையாளும் வசதி என அதிநவீன வசதிகளுடன் தயாராகி வருகிறது.
தற்போது, சென்னை, பெங்களூருக்கு மட்டுமே விமானம் இயக்கப்படும் நிலையில், விரைவில், ஹைதராபாத், மும்பை, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவை துவங்கப்பட உள்ளது.
புதிய முனையம் மூலம், ஏற்றுமதி, இறக்குமதி உயரும் எனவும், வர்த்தகம் மேம்படும் என்றும் உள்ளூர், வெளிமாநில மூதலீட்டார்களை ஈர்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.