பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் கொல்லப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இவ்வழக்கு தொடர்பாக பொன்னை பாலு, திருவேங்கடம், சந்தோஷ், அருள் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான திருவேங்கடத்தை, ஆயுதங்களை மறைத்து வைத்த இடத்திற்கு காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அப்போது அவர் தப்பிக்க முயன்றதாகக் கூறி காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், என்கவுன்டர் செய்யப்பட்ட திருவேங்கடம் உள்ளிட்டோர் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி படுகொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, கொலையாளிகள் தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், தற்போது புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.