தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆங்காங்கே பலத்த காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று முதல் 16-ம் தேதி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி அகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.