மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையைக் கண்டித்து, ஆளுநர் மாளிகை எதிரே பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் மாநில அரசைக் கண்டித்து சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தலைமையில், கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகை எதிரே பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை ஆர்ப்பாட்டம் நடத்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் பாஜகவுக்கு அனுமதியளித்தது குறிப்பிடத்தக்கது.