இத்தாலி வெரோனா மாகாணத்தில் விவசாய நிலத்தில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட 33 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
கைநிறைய சம்பளம் எனக் கூறி, அவர்களை இத்தாலி அழைத்து சென்று நான்கு யூரோ, அதாவது இந்திய மதிப்பில் 350 ரூபாய் மட்டுமே ஊதியமாக கொடுத்துள்ளனர்.
வாரத்தில் 7 நாட்களும் அடிமாடு போல வேலை வாங்கியதுடன், தினமும் 12 மணிநேரம் வரை வேலை வாங்கியுள்ளனர்.
அங்கிருந்து தப்பிய இந்தியர் ஒருவர் மூலம் இதையறிந்த இத்தாலி போலீஸார், கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட இந்தியர்களை மீட்டுள்ளனர்.