நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, வனத்துறையினரின் ரோந்து வாகனத்தை ஒற்றை காட்டு யானை ஆக்ரோஷமாக துரத்தும் காட்சி வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஓவேலி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
ஓவேலி அருகேயுள்ள எல்லமலை கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை, வாகனங்களை வழிமறித்தபடி நின்றது. அச்சமடைந்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானை, வனத்துறையினரின் ரோந்து வாகனத்தை ஆக்ரோஷத்துடன் தாக்கியது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டியடித்தனர்.