தென்காசி மாவட்டம், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அருவிகளில் ஆர்பரித்து தண்ணீர் கொட்டுகிறது.
இதையடுத்து கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது