காவிரியில் வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்திருப்பது நியாயமற்றது! - ராமதாஸ்
Nov 8, 2025, 11:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காவிரியில் வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்திருப்பது நியாயமற்றது! – ராமதாஸ்

Web Desk by Web Desk
Jul 15, 2024, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவிரியில் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பதை தமிழக அரசு ஏற்க கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரியில் தினமும் ஒரு டி.எம்சி. தண்ணீர் திறக்க, காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணையிட்டுள்ள நிலையில், வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்திருப்பது நியாயமற்றது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் அளவுக்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என முதலமைச்சர் சித்தராமையா கூறியிருப்பது உண்மைக்கு மாறானது என குற்றம் சாட்டியுள்ள அவர், கர்நாடக அணைகளுக்கு தினமும் 3 புள்ளி 15 டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் கிடைக்கும் நிலையில், அதில் 1 டி.எம்.சி. நீரை தமிழகத்துக்கு திறந்துவிட மறுப்பது கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.

தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதாக கர்நாடக அரசு கூறியிருப்பது தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு அல்ல என குறிப்பிட்டுள்ள ராமதாஸ், தண்ணீரை அணைகளில் இனியும் தேக்க முடியாத காரணத்தினாலேயே 8 ஆயிரம் கன அடி தண்ணீரை திறக்க கர்நாடக அரசு ஒப்புக் கொண்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறக்காமல் இருக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை சிறிதும் கண்டுகொள்ளாமல் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், தமிழ்நாட்டுக்குறிய உரிமைகளை அரசு தாரைவார்த்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.

இனியும் காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட்டி தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரின் அளவை உறுதி செய்ய வேண்டும் என்றும்,

கர்நாடக அரசு அதையும் மதிக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டுமெனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags: It is unfair that the Karnataka government has announced that 8000 cubic feet of water will be released per second in Cauvery! - Ramadoss
ShareTweetSendShare
Previous Post

மாடு முட்டியதால் விபத்து – சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு!

Next Post

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு- புதிய வீடியோ வெளியீடு!

Related News

சொந்த செலவில் மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற அரசுப்பள்ளி ஆசிரியர்!

பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான கடைகள் உள் வாடகைக்கு விடப்படுகிறது – கோயில் இணை ஆணையரிடம் வியாபாரிகள் புகார்!

ராணிப்பேட்டை அருகே தூய்மை பணியாளர்கள் தர்ணா!

எல்.கே. அத்வானி பிறந்த நாள் – பிரதமர் மோடி, எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

வளர்ந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு உட்கட்டமைப்புகள் முக்கிய உந்து சக்தியாக விளங்குகிறது – பிரதமர் மோடி

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜக மூத்த தலைவர் அத்வானி பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

திமுக ஆட்சியில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளி பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட போதை இளைஞர்கள்!

அரசு நிதியை ரூ. 4 கோடி கையாடல் செய்த சீனியர் ஆடிட்டர் தற்கொலை – விசாரணையில் அம்பலம்!

ஒப்பந்ததாரர் தேர்வில் அமைச்சர் துரைமுருகன் பிடிவாதம் – மணல் குவாரி திறப்பு முடக்கம்!

இன்றைய தலைமுறையினருக்கான பிரத்யேக மேடையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது – எல்.முருகன்

பீஹாரில் அதிக வாக்குப்பதிவு மீண்டும் என்டிஏ ஆட்சி அமையும் என்பதை உறுதிப்படுத்துகிறது – பிரதமர் மோடி

சமூகம் கருணையை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே செல்போன் டார்ச் அடித்து அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்!

கோவை மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies