விருதுநகரில் தனியார் சிமண்ட் ஆலையின் மேலாளர்கள் வீடுகளில் 200 சவரன் நகைகளை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தனியார் சிமென்ட் ஆலையின் பொதுமேலாளர்களான ராமச்சந்திரன், பாலமுருகன் ஆகியோரது வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து இருவரும் அளித்த புகாரின் பேரில் நிகழ்விடத்தில் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் முதற்கட்ட விசாரணையாக அங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.