இமயமலையில் 16500 அடி உயரத்தில் புதிய கோயில் சாமியார் பாபாவால் சர்ச்சை!
Sep 10, 2025, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமயமலையில் 16500 அடி உயரத்தில் புதிய கோயில் சாமியார் பாபாவால் சர்ச்சை!

Web Desk by Web Desk
Jul 18, 2024, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகண்ட் மாநிலத்தில், பாகேஷ்வரில் உள்ள சுந்தர்துங்கா பனிப்பாறையில் 16,500 அடி உயரத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இக்கோயிலை பாபா யோகி சைதன்யா ஆகாஷ் என்பவர் அரசு விதிமுறைகளை மீறி கட்டி உள்ளார்.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

உத்தரகாண்டில் உள்ள பாகேஷ்வர், சரயு மற்றும் கோமதி நதிகளின் சங்கமத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.

இமயமலை மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள பாகேஷ்வர் தன் இயற்கை அழகு மிக்கது. பழமையான இந்து மத வரலாற்று சிறப்பு உடைய சிவன் கோயில்களான பாக்நாத் மற்றும் பைஜ்நாத் கோயில்கள் பாகேஷ்வரில் உள்ளன.

ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், பாகேஷ்வரில் பிக்ஹௌடி மேளா வெகு விமர்சையாக கொண்டாடப் படுகிறது. இவ்விழாவில் முக்கிய அம்சம் பாரம்பரிய குமாவோனி நடனம் ஆகும், இது இப்பகுதியின் பிரபலமான நாட்டுப்புற நடனமாகும்.

இமயமலை அடிவாரத்தில் குமாவோன் பகுதியில் அமைந்துள்ள பாகேஷ்வர் நகரம் இயற்கை அழகு. கம்பீரமான மலைகள், பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் அழகான ஆறுகள் என இயற்கை அழகு நிறைந்தது. பாகேஸ்வரில் உள்ள பிண்டாரி பனிப்பாறை மற்றும் சுந்தர்துங்கா பனிப்பாறை ஆகியவை பிரபலமான மலையேற்ற இடங்களாகும்.

இத்தனை இயற்கை அழகு கொஞ்சும், சுந்தர்துங்கா பனிப்பாறையில் 16,500 அடி உயரத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தில், விதிமுறைகளை மீறி கோயில் கட்டப்பட்டிருக்கிறது. தன்னை தானே கடவுளாக சுய பிரகடனம் செய்து கொண்ட பாபா யோகி சைதன்ய ஆகாஷ் என்பவர் இக்கோயிலைக் கட்டி இருக்கிறார்.

தனது கனவில் பகவதியம்மன் தோன்றி, சுந்தர்துங்கா பனிப்பாறையில் உள்ள தேவி குண்டம் என்னும் இடத்தில் கோயிலைக் கட்டும்படி கட்டளையிட்டதாகக் கூறி, கோயில் கட்டும் திட்டத்துக்கு உள்ளூர் கிராம மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறார்.

இந்த தேவி குண்டம், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி இந்துக்கள் மிக புனிதமான வணங்கும் இடமாகும். புனிதமான தேவி குண்டம், இப்போது பாபாவின் நீச்சல் குளமாகி இருக்கிறது. தேவி குண்டத்தில் பாபா குளிப்பது, பகவதி அம்மனை மட்டுமில்லை இந்து மதத்தையே அவமதிக்கும் செயலாகும் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டு கின்றனர்.

மேலும், பல நூற்றாண்டுகளாக, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நந்தராஜ் யாத்திரையின் போது தங்கள் தெய்வங்கள் தேவி குண்டத்துக்கு வருகிறார்கள் என்றும், ​​இந்த பாபா கிராம மக்களைத் தவறாக வழிநடத்தி, தங்கள் பாரம்பரியத்துக்கு எதிராக இந்த கோவிலைக் கட்டியுள்ளார் என்று உள்ளூர் மக்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மக்களின் எதிர்ப்பால், உரிய அரசு அனுமதி பெறாமல் கட்டப்பட்ட இந்த கோயில் குறித்து அரசு தன் விசாரணையை தொடங்கியுள்ளது.

வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய் அலுவலகத்தின் குழு விரைவில் தேவி குண்டத்துக்குச் சென்று ஆக்கிரமிப்பை அகற்றுவார்கள் என்று கூறிய சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் அனுராக் ஆர்யா, விரைவில் பாபா யோகி சைதன்யா ஆகாஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதிப்பட தெரிவித்திருக்கிறார்.

இந்திய பாரம்பரியம் மிக்க இடங்களில் இது போன்ற தனிநபர்கள், உரிய அனுமதி பெறாமல் தங்கள் இஷ்டத்துக்குக் கோயில் என்ற பெயரில் கனிம வளம் மிக்க நிலங்களை ஆக்கிரமிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Tags: New temple at 16500 feet in the Himalayas by preacher Baba Controversy!
ShareTweetSendShare
Previous Post

சாலையின் நடுவே கொலை செய்யப்பட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகி!

Next Post

முதியவரை காப்பாற்றிய பெண் மருத்துவருக்கு பாராட்டுகள்!

Related News

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies