வந்துவிட்டது சாதனம்! பட்டனை தட்டினால் போதும் வலியில்லாமல் மரணம்!
Nov 13, 2025, 08:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வந்துவிட்டது சாதனம்! பட்டனை தட்டினால் போதும் வலியில்லாமல் மரணம்!

Web Desk by Web Desk
Jul 20, 2024, 11:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வலியில்லாமல் வேதனை இல்லாமல் மரணிக்க விரும்புவர்களுக்க சாதனம் ஒன்றை சுவிட்சர்லாந்தில் உருவாக்கி இருக்கின்றினர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சுவிட்சர்லாந்தில் தற்கொலைக்கு சட்ட அனுமதி இல்லை என்றாலும் கருணைக் கொலைக்கு அந்நாட்டில் அனுமதி உண்டு. எந்த வித நோக்கமும் இல்லாமல் வாழ்ந்தது போதும் என்று எண்ணும் நபர்களுக்கு , இறப்பதற்கு வழி காட்டும் அமைப்புக்களும் சுவிட்சர்லாந்தில் உள்ளன. அப்படி ஒரு அமைப்புத் தான் THE LAST RESORT என்ற அமைப்பு.

இந்த அமைப்பின் தலைமை நிர்வாகியாக இருக்கும் போரியன் வில்லட், விருப்பப்பட்டு சாக வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் இந்த சிறிய தற்கொலை சாதனத்தை உருவாக்கி இருப்பதாக கூறி இருக்கிறார்.

2019 ஆம் ஆண்டு முதல் முதலாக வடிவமைக்கப்பட்ட Sacro capsule, சாதனம் பார்ப்பதற்கு விண்வெளிக்குச் செல்லும் ஓடம் போல் காட்சியளிக்கிறது.
ஒரு நபர் படுத்துக்கொள்ளும் அளவுக்கு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது இந்த சர்கோ காப்ஸ்யூல் என்ற சிறிய சாதனம். 3டி தொழில் நுட்பத்தில் இந்த வாகனம் உருவாக்கப் பட்டுள்ளது.

நெதர்லாந்தில் 12 ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பின், சுமார் 7.10 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவில் தயாரிக்கப் பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கருணைக்கொலை வழக்கறிஞரான டாக்டர். பிலிப் நிட்ச்கே, இந்த தற்கொலை சாதனத்தை உருவாக்கியுள்ளார். அவர், கண்ணியமான மரண அனுபவத்தைப் பெற விரும்பும் மக்களுக்காக இது தயாரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மிகவும் நவீனமயமாக உருவாக்கப்பட்டிருக்கும், இந்த சர்கோ காப்ஸ்யூலில் ஏறி உள்ளே படுத்துக் கொண்டபின் மூடியை மூடிவிட்டால், குரல் செயலி மூலம் சாவதற்கான வழிமுறைகளை தானியங்கி அறிவிக்கிறது. கடைசியாக இந்த பட்டனை அழுத்தவும் என்று கட்டளை இடுகிறது என்று டாக்டர். பிலிப் நிட்ச்கே தெரிவித்திருக்கிறார்.

ஒருமுறை பட்டனை அழுத்தினால், காற்றில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு 30 வினாடிகளுக்குள் 21 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாகக் குறைகிறது. இதனால் குறைந்த பட்சம் 5 நிமிடங்களுக்குள்ளேயே சர்கோ காப்ஸ்யூலில் படுத்திருக்கும் நபருக்கு மரணம் ஏற்படுகிறது என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.

ஒருமுறை பட்டனை அழுத்தினால், வலியற்ற மரணம் நிச்சயம் என்று கூறும் டாக்டர். பிலிப் நிட்ச்கே வழக்கமான கருணைக்கொலை முறைகளுக்கு மாற்றாக இது மனிதாபிமானத்தை வழங்குகிறது என்று கூறியிருக்கிறார்.

ஒருவர் இந்த சர்கோ காப்ஸ்யூலைப் பயன்படுத்த 20 அமெரிக்க டாலர்கள் என்று விலை நிர்ணயிக்க பட்டுள்ளது.

உலக நாடுகளின் மகிழ்ச்சிக் குறியீட்டு பட்டியலில், 7வது இடத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்தில், சாக்ரோ கேப்சூல் என்ற பெயரில் தற்கொலை வாகனம் வந்திருப்பது, விவாதத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு பட்டனைத் தட்டினால் போதும் தூக்கம் வருவது போல மரணம் மெல்ல மெல்ல வரும் என்ற இந்த சர்கோ காப்ஸ்யூல் மூலம் இறப்பை போகும் முதல் நபர் யார் என்பது தான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

Tags: The device has arrived! Painless death at the touch of a button!
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் பிரம்மாண்ட குத்துவிளக்கு பூஜை!

Next Post

யுபிஎஸ்சி ஆணைய தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா!

Related News

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு கட்டும் விவகாரம் – இடைக்கால தடை நீட்டிப்பு!

சோழவரம் ஏரியில் சீரமைப்பு பணிகளை முறையாக செய்யவில்லை என குற்றச்சாட்டு!

செங்கம் அருகே முயல் வேட்டைக்கு சென்ற இருவர்  மின்சாரம் தாக்கி பலி!

திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

தம்பி விஜய் அண்ணனை மறந்திருக்கலாம் – சீமானி சமாளிப்பு!

ஆளும் கட்சியே சட்டத்தை மதிப்பதில்லை – உயர் நீதிமன்றம் அதிருப்தி!

Load More

அண்மைச் செய்திகள்

யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதே முக்கியம் – நயினார் நாகேந்திரன்

பயங்கரவாதிகளின் மற்றொரு கார் ஹரியானாவில் கண்டுபிடிப்பு!

டெல்லியில் கார் வெடிப்பு பயங்கரவாத சம்பவம் – மத்திய அரசு அறிவிப்பு!

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

பிரசாதத்தில் விஷத்தை கலந்து கொலை செய்ய திட்டம் : பயங்கரவாதிகளின் MASTER PLAN முறியடிப்பு!

பயங்கரவாதிகளின் மையமாக செயல்பட்டதா Al-Falah பல்கலைக்கழகம்? – இறுகும் பிடி விசாரணையில் பகீர் தகவல்கள்!

காசி, அயோத்தியை குறிவைத்த பயங்கரவாதிகள் : டெல்லி சம்பவத்தின் பகீர் பின்னணி!

டெல்லி சம்பவம் தவியாய் தவிக்கும் குடும்பங்கள் : கண்ணீரில் உழலும் உறவுகள் – பெருந்துயர் நீங்குமா?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies