“திருமலை திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான உணவின் தரத்தை உயர்த்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என்று திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.
அன்னதானத்திற்கு தேவையான அரிசியை விதிமுறைகளுக்கு உட்பட்டு டெண்டர் மூலம் தேவஸ்தானம் கொள்முதல் செய்து வருகிறது.
ஆனால், அவ்வப்போது தரம் குறைந்த அரிசியை சிலர் சப்ளை செய்வது தெரியவந்தது. இந்நிலையில், தரம் குறைந்த அரிசி சப்ளை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.