அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தகாத உறவில் பிறந்ததாக கூறி வாயில் மண்ணை போட்டு குழந்தையை கொன்ற பாட்டியை போலீசார் கைது செய்தனர்.
கோட்டைகாடு கிராமத்தை சேர்ந்த ராஜா – சந்தியா தம்பதியினருக்கு மோனிஷ், கிருத்திகா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சந்தியாவின் மாமியாரான விருத்தம்பாள், கிருத்திகா தகாத உறவில் பிறந்த குழந்தை என மருமகளை குறை கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத வேளையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கிருத்திகாவின் வாயில் மண்ணை போட்டு விருத்தம்பாள் கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விருத்தம்பாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.