தாக்கினால் மரணம் உறுதி அச்சுறுத்தும் நிபா அறிகுறிகள் என்ன?
Jan 14, 2026, 06:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாக்கினால் மரணம் உறுதி அச்சுறுத்தும் நிபா அறிகுறிகள் என்ன?

Murugesan M by Murugesan M
Jul 23, 2024, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் சிறுவன் உயிரிழந்த நிலையில், இதை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நிபா வைரஸ் பரவல் எவ்வாறு நிகழ்கிறது? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.

நிபா வைரஸ் ZOONOTIC DISEASE வகையைச் சேர்ந்தது. அதாவது கொரோனாவைப் போலவே விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுவது. வெளவால்கள் சாப்பிட்ட பழங்கள் போன்றவற்றால் நிபா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. சுகாதாரமற்ற உணவை உட்கொண்டாலோ, பாதிக்கப்பட்டவருடன் நேரடி தொடர்பில் இருந்தாலோ வைரஸ் பரவும்.

நிபா பாதிப்பை, அறிகுறிகள் அற்ற தொற்று, கடுமையான சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தும் தொற்று, மூளை அழற்சியை உண்டாக்கும் தொற்று என மூன்று விதமாக பிரிக்கிறார்கள்.

தொற்று ஏற்பட்டு 4 முதல் 14 நாட்களுக்கு பிறகே நிபா அறிகுறிகள் தென்படத் தொடங்கும்.
காய்ச்சல், தலைவலி, தசை வலி, இருமல், வாந்தி, தொண்டைப் புண் போன்ற அறிகுறிகள் முதற்கட்டமாக ஏற்படும்.

பின்னர் மயக்கம், தூக்கமின்மை, நரம்பியல் பிரச்னைகள், சுவாசப் பிரச்னை, மனநலப் பிரச்னை, நிமோனியா, கோமா உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் ஏற்படலாம்.
அறிகுறிகள் இருப்போர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். அவர்களுக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும். காய்கள் மற்றும் பழங்களை நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும். கிணறுகள், குகைகள், தோட்டங்கள், இருள் சூழ்ந்த இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

நோயாளிகளை பரிசோதிக்கும் சுகாதார அலுவலர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொள்ள வேண்டும். ரத்தம், தொண்டை சளி மற்றும் சிறுநீர் மாதிரிகளை பரிசோதனை செய்ய வேண்டும். நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகளை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாத்து 48 மணி நேரத்துக்குள் ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும். பரிசோதனையின் முடிவுகளை சுகாதாரத்துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர் உயிரிழக்கும் வாய்ப்புகள் அதிகம். தற்போதைய சூழலில் நிபா வைரஸை தடுக்க தடுப்பூசி இல்லை. அதே போல் இதற்கென்று தனியாக சிகிச்சைகளும் கிடையாது.

Tags: What are the symptoms of Nipah which can be fatal if attacked?
ShareTweetSendShare
Previous Post

பட்ஜெட் : ஒரு ரூபாயில் வரவு, செலவு என்ன?

Next Post

பசிபிக் பெருங்கடலில் ஆய்வு செய்ய முடிவு இந்தியாவின் திட்டம் என்ன?

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies