பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளபதிவில், இன்றைய தினம், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடியின் 112 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியை, பெரம்பலூர் மாவட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளுடன் அமர்ந்து கேட்டு மகிழ்ந்தோம்.
நமது நாட்டின் செழுமையான கலாச்சாரம் குறித்தும் அவற்றைக் காக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்தும், நமது பிரதமர் பெருமையுடன் பேசினார். மேலும், போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுப்பதில் நம் ஒவ்வொருவரின் பங்கு குறித்தும் பேசிய நமது பிரதமர் , அதற்காக மத்திய அரசின் தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றான, புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள மானஸ் (MANAS) இணையதளத்தையும், போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீட்பு மற்றும் மறுவாழ்வுக்கு உதவும் 1933 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணையும் குறிப்பிட்டார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில், நமது நாடு இம்முறை அதிக அளவில் பதக்கங்கள் வெல்லும் என்ற நம்பிக்கையையும், நமது பிரதமர் வெளிப்படுத்தினார் என அண்ணாமலை தெரிவத்துளளார்.