நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களும் வழக்கு நடவடிக்கைகள் ஏதுமின்றி உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் நெடுந்தீவு கடல் அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறைபிடிக்க முற்பட்டனர். மீனவர்களின் படகு மீது ரோந்து கப்பல் மோதியதில் ஒரு மீனவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் காணாமல் போனார்.
மேலும், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்க இரு மீனவர்கள் ஊர்க்காவல்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.
மேலும், யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட உயிரிழந்த மீனவரின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இந்தியா அனுப்பி வைக்கப்படும் என்றும், காணாமல்போன மீனவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.